Sunday 14 June 2015

உழைப்பிற்கு வயது உண்டா ?

 உழைப்பிற்கு வயது உண்டா ?
கதை நீதி : உழைப்பே உயர்வு
அமெரிக்காவின் பிரபல கோடிஸ்வரர் ஒருவர் முதுமையிலும் கடும் உழப்பை மேற்கொண்டிருந்தார்.நாளுக்கு ஒரு நாடு என்று பயணம் செய்பவர் அவர்.ஒரு முறை விமானத்தில் அவர் பயணம் செய்த போது பக்கத்துக்கு இருக்கையில் இருந்த இளைஞர் அவரை வியப்புடன் பார்த்தார்.பயணத்தின் போது கூட பணி செய்து கொண்டே இருந்தார்.உடனே அந்த இளைஞர் அவரிடம் அய்யா நீங்கள் ஏகப்பட்ட சொத்து சேர்த்து வைத்துளிர்கள்.இனியும் இந்த வயதான காலத்தில் உழைக்க வேண்டுமா என்று கேட்டார்.அதற்கு அந்த பெரியவர் தம்பி, இந்த விமானத்தை விமானி நல்ல உயிரத்தில் பறக்க வைத்திருக்கிறார்.சிரமப்பட்டு மேலே ஏறியதால் இப்போது சுலபமாக பறக்றது இல்லையா.அதான் விமானம் மேலே எறிவிட்டது என்று விமானி என்ஜின் ஐ   அணைத்துவிட்டால்  என்ன ஆகும் விபத்து ஏற்பட்டு விடும்.அது போல தான்  வாழ்க்கையும் நாம் கடுமையாக   உழைத்து மேலே வந்து விட்டு,நாம் தான் மேலே வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்தி விட்டால் வாழ்கையிலும் விபத்து ஏற்பட்டு விடும் .உழைப்பு வருமனதுகனது மட்டும்மல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சியிற்கும் கூட என்று கூறியவர் வயதான இளைஞர் ராக்பெல்லர் ஆவார்.

No comments:

Post a Comment