Sunday 14 June 2015

பொன்னியின் செல்வன் -கல்கி

     எனக்கு  படித்ததில்  பிடித்தது               
ச.வேல்முருகன்,
துணைப்பேராசிரியர்,
ஆதிபராசக்தி  பொறியியல் கல்லூரி ,
மேல்மருவத்தூர்.                                                                       
                             
                                            பொன்னியின் செல்வன் -கல்கி
எனக்கு  படித்ததில்  பிடித்தது  கல்கி அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" என்ற  வரலாற்று நாவல் தான் .பிற்கால  சோழர்களில் தலை சிறந்த மன்னராகிய இராஜா ராஜா சோழனின்  பெயரில் இருந்தாலும் வாணர்குல இளவரசன் வல்லவரையன் வந்தியத் தேவனே  கதையின் நாயகன் ஆவார் .தன்கையில் வந்த மணிமகுடத்தை இன்னொருவர் சிரசில் சுட்டிய தியாக சிகரம் அருள்மொழிலர்மனின் ( இராஜா ராஜா சோழன்) வீரத்தையும் தியாகத்தையும் மையமாக வைத்து வந்தியத் தேவன் எனும் கலகலப்பான பாத்திரத்தை கொண்டு மிக நேர்த்தியாக  கல்கி கிருஷ்ணமூர்த்தி 5 பாகங்களையும வாசகர்களின் நாடிதுடிப்பிற்கு ஏற்றவாறு 
நகர்த்தி செல்வதுதான் அனைவரையும் கவர்ந்த ஒன்று.கடைசி அத்தியாயத்தில் "வேடிக்கையும்,விளையாட்டும் ,குறும்பும் ,குதூகலமும்,துடுக்கும்  உருக்கொண்டவனாக இருந்த வந்தியத்தேவனை 
இனி நாம் காணப்போவதில்லை"என்று கல்கி அவர்கள் எழுதியதை  படித்தபோது  கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் ஆறாக ஓடியது இன்றும் மறக்க முடியாது.அப்போது நான் ஒன்பதாவது  வகுப்பு முடிந்து  பத்தாம் வகுப்பு செல்ல இருந்த நேரம் இருப்பினும் என்னை படிக்க தூண்டிய
என் பெற்றோர்களை நினைத்து  பெருமிதம் கொள்கிறேன்.

No comments:

Post a Comment