Sunday 14 June 2015

கடவுளின் கருணையா ?

கடவுளின் கருணையா ?
கதை நீதி : முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்.
                        ஒரு உலக புகழ் பெற்ற இசை மேதை ஒருவர் வழக்கம்போல
அபாரமாக ஒருமுறை பியானோ வாசித்தபோது கூடி இருந்த அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரம் ஆகியது.பலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.அப்போது ஒரு பெண்மணி அவர் கரங்களை பற்றி கொண்டு முத்தமழை பொழிந்து,உங்கள் கரங்கள் விசேசமானவை.உங்களுக்கு என்று யாருக்கும் தராத சிறப்பான ஆற்றலை கடவுள் வழங்கி உள்ளார் என்று அப்பெண்மணி கூறினார்.அதற்கு அம்மேதை அம்மணி இது கடவுள் அளித்த ஆற்றல் இல்லை,தினம்தோறும் என்னுடிய 8 மணி நேர பயிற்சியின் பலன் இது. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நீங்களும் இப்படி வாசிக்கலாம் என்று கூறிய இசை மேதை வேறு யாரும் இல்லை செவிப்புலன் பழுதுற்ற பீத்தோவன்.

No comments:

Post a Comment