Sunday 28 June 2015

வீட்டில் இருந்து கொண்டே உங்களின் அறிவை உபயோகப்படுத்தி சம்பாதிக்க!

அடச்சே! நமள்ள எதுக்கு லட்சகணக்கா செலவு பண்ணி இன்ஜினியரிங் படிக்க வச்சாங்க வீட்ல சும்மா உட்காரவா? என்று புலம்பும் பெண்ணா நீங்கள்? அல்லது படித்து கொண்டே வேலை செய்ய நினைக்கும் மாணவர்களா நீங்கள்? உங்களுக்கான பகுதி இதோ. என்னுடைய அறிவை உபயோகப்படுத்த வேண்டும்  அதே நேரத்தில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கான வேலையை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் அதற்காக பல வலைதளங்கள் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கின்றன அதில் சில  நம்ப தகுந்த வலைதளங்கள் மூலம் உங்களுக்கான வேலையை நீங்கள் செய்ய இதோ எங்களின் பரிந்துரைகள்:
                                                                    1-freelancer.in 
                                                                    2-guru.com 

 உங்களின் முன்னேற்றதிற்கு வாழ்த்துக்கள் !!!

ஜிமெயிலில் நாம் அனுப்பிய மெயிலினை திரும்ப பெறுவது எப்படி ?


அய்யய்யோ! மெயிலை தவறான மெயில் id க்கு அனுப்பி விட்டோமே, தவறான பைலினை அட்டாச் செய்து அனுப்பி விட்டோமே  என வருந்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக நாம் அனுப்பிய மெயிலை திரும்பப்  பெரும் வசதியினை ஜிமெயில் நமக்கு ஏற்படுத்தி தந்து உள்ளது. ஆனால் என்ன தற்சமயம் இதை செய்வதற்கான நேரம் குறைவு 05-30 நொடிகள் தான். இதுவரை கூகுள் labs மூலம் இந்த சேவையை பரிசோதனை மூலம் நமக்கு வழங்கியது. அதை நம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது கூகுள் நிறுவனம். இதனை பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஜிமெயிலினை log in செய்தால் வரும் திரையின் வலது பக்கத்தின் மேல் பகுதியில் பல்சக்கரம் போன்ற icon ஐ கிளிக் செய்து settings optionஐ கிளிக் செய்தால் வரும் திரையில் undo send யினை enable செய்து  உங்களுக்கு தேவையான நேர அளவினை select செய்து save  செய்தால் நீங்கள் இந்த வசதியினை எளிதாக பெற்றுவிடலம். சரி எப்படி undo செய்வது என்று கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பதில் நீங்கள் மெயிலினை send செய்த பிறகு  மேலே காட்டி உள்ளவாறு notification ஒன்று வரும் அதில்  நீங்கள் undoவினை நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் click செய்தால் நீங்கள் உங்கள் மெயிலினை எளிதாக திரும்ப பெற்று கொள்ளலாம்.

Sunday 14 June 2015

பணிப் பண்பாடு -இறையன்பு

பணிப் பண்பாடு -இறைன்பு 
முதல் பதிப்பு: மே 2009
  பதிப்பகம் -NCBH                             விலை -15


‘மற்றவர்களுக்காகப் பணி செய்கிறோம்’ என நினைத்தால் உடலில் தளர்வும் உள்ளத்தில் சோர்வும் ஏற்படும். “நமக்காகவே நாம் பணியாற்றுகின்றோம்” என்கிற உண்மை புரிந்தால், உழைப்பு களைப்பை வரவழைக்காது. ஈடுபாடு இல்லாமல், எந்தப் பணியைச் செய்தாலும் அது வயலுக்குப் பாய்ச்சும் வாய்க்காலாக இல்லாமல், நிழலுக்கு இறைத்த நீராகிவிடும். நேரத்தை மாத்திரம் சேர்த்து வைக்க முடியாது. இன்று பணியாற்ற மறுத்தால், ஒருநாள் போனது போனதுதான். மகத்தான மண்டபத்தை உருவாக்க நினைக்கிறபோது, அதில் கலசம் வைக்கிறவர்கள் மட்டுமல்ல; கடைக்கால் எழுப்புபவர்களும் அக்கறையோடு பணியாற்றினால்தான், கட்டடம் காற்றில் இடிந்து விழாமல் காப்பாற்றப்படும்.
"சென்னை வானொலியில் உழைப்பின் மகத்துவம் பற்றி ஐந்து நாட்கள் உரையாற்றக் கேட்டிருந்தார்கள். அந்த உரைகள் பணிப்பண்பாடு என்கிற சின்னச் சஞ்சிகையாகத் தொகுக்கப்பட்டது. அரை மணி நேரத்தில் வாசித்து விடலாம். பல நிறுவனங்கள் இந்த நூலை தன்னுடைய பணியாளர்களுக்கு வாங்கி வழங்கி கட்டாயம் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தின. பணியை பாரமாகக் கருதாமல் இனிமையான நிகழ்வாகக் கருதவேண்டும் என்கிற மையக் கருத்து சின்ன சம்பவங்களின் துணையோடு சுவாரஸ்யமாகக் கூறப்பட்டிருந்ததால் இதை போல நிறைய எழுதவேண்டுமென்று பதிப்பாளர்கள் வற்புறுத்தினார்கள். இதை வாசித்த பலர் தாங்கள் செய்கிற பணியை புதிய அணுகுமுறையுடன் நோக்குவதாகத் தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் இது வெற்றி பெற்ற நூல்."
இறையன்பு
  நன்றி :iraianbu.in

வாசிப்போம் வளர்வோம்

வாசிப்போம் வளர்வோம் 
கதை நீதி : புத்தகங்களே வாழ்க்கையின் தத்துவங்கள்.
கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களிடம் பேராசிரியர் ஒருவர்
மாணவர்களே இன்ப சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கே செல்லலாம் என்று நீங்களே கூறுங்கள் என்று கேட்டார். உடனே மாணவன் ஒருவன் எழுந்து குற்றாலம் என்றான். அதற்கு பல மாணவர்கள் பார்த்தாச்சு என்று கூறினர். இன்னொரு மாணவன் கொடைக்கானல், மற்றொரு மாணவன் ஊட்டி, ஓகேனக்கல், என்று கூற அதற்கும் பார்த்தாச்சு என்றே பதில் வந்தது. உடனே ஒரு மாணவன் எழுந்து நம் கல்லூரியின் நூலகம் செல்லலாம், அங்கு தான் ஒருவரும் சென்றதில்லை என்று கூறினார். உடனே வகுப்பறை முழுவதும் ஒரே சிரிப்பலை எழுந்தது. இது சிரிப்பதற்கு மட்டும் அல்ல சிந்திக்கவும் வேண்டிய விஷயம். இது மாணவர்களிடம் வசிக்கும் திறன் குறைந்து கொண்டே செல்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. பல சாதனையாளர்களை உருவாக்கியது புத்தகங்கள் தான் என்பது மறுக்க  முடியாத உண்மை. சில சாமானியன்களை சரித்திர சாதனையாளர்களாக மாற்றிய புத்தகம்:
ரஸ்கினின் கடையனுக்கும் கடை தோற்றம்  - மோகன் தாஸ் என்ற சாமானியனை                 மகாத்மாவாக மாற்றியது.
சேக்கிழரின் பெரிய புராணம்  - வெங்கட்ராமனாய் இருந்தவரை பகவான் ரமனமஹிரிஷியாய் மாற்றியது.
 இது போன்று எராளமானவர்களின் வாழ்க்கையையே மாற்றியப் புத்தகங்கள் உங்களையும் உயர்த்த காத்து கொண்டு தான் இருக்கின்றன.

தலைமை பண்பு

தலைமை பண்பு
கதை நீதி :தலைமைக்கு தகுதி வேண்டும்
மாவீரன் அலெக்சாண்டர் தன் போர் வீரர்களுடன் உலகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது பாலை வனம் ஒன்றை அடைந்தனர்.அப்போது அனைவரும் தண்ணீர் தாகத்தால் சோர்வடைந்தனர். அப்போது அந்த வழியே சில இறை தொண்டர்கள் சென்றனர்.அப்போது அலெக்சாண்டரை கண்ட அவர்கள் தங்களிடம் இருந்த குவளை தண்ணீரினை அவனுடைய தலை கவசத்தில் ஊற்றி கொடுத்து பருகுமாறு கூறினர்.அதற்கு அந்த மாவீரனோ என் தலைமையை நம்பி   எனக்காகவும் தங்கள் நாட்டுக்காகவும்  இவர்கள் என்னுடன் வந்து உள்ளனர்.எனவே இவர்களை விடுத்து  நான் மட்டும் தண்ணீரை பருகினால் அது தலைமைக்கு அழகல்ல,என்று கூறி தண்ணீரை பருக மறுத்து நன்றி கூறி  இறை தொண்டர்களிடம் இருந்து விடை பெற்றான்.இதை கண்ட போர் வீரர்கள் அட நம் மன்னர் நம்மை சிறப்பித்து விட்டார், என்று கூறி உற்சாகத்தில் தாகத்தை மறந்து போர் புரிந்து  வெற்றிகளை குவித்து அலெக்ஸாண்டரின் பாதங்களில் சமர்பித்தனர். 

விடா முயற்சியும் தன்நம்பிக்கையும்

விடா முயற்சியும் தன்நம்பிக்கையும் 
கதை நீதி :விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி 
வழிப்போக்கன்  ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டி செல்ல வேண்டி இருந்தது. ஊரை சுற்றி ஒரே வறட்சி நிலவி இருந்தது.அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே தண்ணீரை தேடிய பயணம் செல்ல வேண்டி இருந்தது.அப்படியோர் வறட்சி நிலவி இருந்தது.அப்போது ஒரே ஒருவனுடைய நிலம் மட்டும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.உடனே அந்த வழிப்போக்கன் அங்கு சென்று கிணற்றில் நீர் இறைத்து கொண்டு இருந்தவனிடம் தண்ணீர் கேட்டு பருகினார்.உடனே அந்த வழிப்போக்கன் நன்றி என்று கூறி விட்டு ஊரே வறட்சியில் இருக்கும் போது உன்னுடைய நிலம் மட்டும் இப்படி பச்சை பசேல் என்று இருக்கிறது என்றால்  உனக்கு இறைவனின் கொடை அதிகம் இருக்கிறது என்று சொன்னான்.உடனே அந்த விவசாயி ஐயா இந்த நிலமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரை போன்று வறண்டு தான் கிடந்தது.என்னுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும்   தான் இன்று இப்படி காட்சி அளிக்கிறது என்று பணிவாக கூறினான்.மேலும் ஐயா நான் இந்த நிலத்தை பதபடுத்திய போது இந்த நிலம் மட்டும் பதப்படவில்லை உடன் என் மனமும் பக்குவப்பட்டது என்றான்.இது போன்ற விடா முயற்சியும் தன்நம்பிகையும் இருந்தால் நாம் ஈடுபடும் காரியத்தில் மட்டும் இன்றி வாழ்விலும் வெற்றி பெறலாம் என்று அந்த வழிபோக்கனுக்கு புரிந்தது.

தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும்:

தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும்:
கதை நீதி : துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம்  தளராமல் இருக்க வேண்டும்
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார். பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி முடித்தார்.

முயற்சி

முயற்சி 
கதை நீதி :முயற்சி  திருவினை ஆக்கும் :
ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய தேயிலையை எல்லா கடைகளிலும் விற்பதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டுபட்டு இருந்தார்.ஆனால்  அந்த  பகுதியில்  அந்த தேயிலை பரிட்சயம் இல்லை.ஆனால் விற்பனை பிரதிநிதியின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு சிலர் மட்டும் சில பொட்டலங்களை வாங்கி காட்சிக்கு வைத்து இருந்தனர் .ஆனால்  ஒருவர் மட்டும் வாங்க மறுத்து வந்தார். உடனே அந்த விற்பனை பிரதிநிதி தன் மகளை அழைத்து அந்த கடைக்கு அனுப்பி அந்த தேயிலை இருகிறதா  என்று கேட்டு வாங்கி வரசொன்னார். இரண்டாவது நாள் வேறு ஒரு சிறுவன் மூன்றாவது நாள் வேறு ஒரு சிறுவன் என்று அந்த கடயை நோக்கியே பலரும் படை எடுக்க வேறு வழி இன்றி அந்த கடைகாரரும் தேயிலை பொட்டலங்களைவாங்க ஆரம்பித்தார்.அவருடைய கடையிலும் அந்த தேயிலை பொட்டலங்களை பார்த்த மக்கள் சிலர் அதை வாங்க முன் வந்தனர். பிரதிநிதி பல இலவசம் மற்றும் தள்ளுபடி என்று வாங்குபவர்களை கவர்ந்து அந்த தேயிலையை மக்கள் மனதில் பதியவைத்தார். நாளடைவில் அந்த தேநீர் சுவையானது தான் என்று பரவலாக மக்களுக்கு தெரிய  ஆரம்பித்தது.இரண்டே ஆண்டுகளில் போட்டி தேயிலையை  வென்று தன கனவை நனவாக்கினார்.எனவே முயற்சி இருந்தால் நாம் எதிலும் வெற்றி அடையலாம்.

வண்டிகார பெருந்தகை

வண்டிகார பெருந்தகை
கதை நியதி :பலனை எதிர்பார்க்காதே!
ஒரு கூக்கிராமத்தை நோக்கி பண்டிதர் ஒருவர்  மாட்டு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த மாட்டு வண்டிகாரனிடம் அந்த பண்டிதர்,ஐயா இந்த ஊரில் சிதம்பரம்  பிள்ளை என்ற ஒரு வள்ளல் இருந்தாரே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவர் மேலே போய் சேர்ந்துட்டார் என்று பதில் வந்தது.அது சரி அவரை பற்றி ஏன் கேட்டீர்கள்,என்று வண்டிக்காரன் கேட்டார்.அதற்கு அந்த பண்டிதர் தன் கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ஏழையாக பிறந்த எமக்கு படிக்க பணம் கொடுத்த வள்ளல் அவர்.அதனால் தான் எமக்கு இந்த வாழ்கை கிடைத்தது,என்று கூறி அழுதுவிட்டார்.ஊர் வந்தவுடன் கீழே இறங்கி பேசிய வாடகையை எடுத்து நீட்டினார் அந்த பண்டிதர்.உடனே அந்த வண்டிக்காரன் பணம் வேண்டாம் என்று கூறி புறப்பட தயாரானான்.அதற்கு அந்த பண்டிதர், ஏன் வேண்டாம்,எதற்கு வேண்டாம் என்று கேட்டார் . அதற்கு அவர் ஐயா நீங்கள் கேட்ட சிதம்பரம் பிள்ளை பரம்பரை தாங்க நாங்க.இப்போ நொடிஞ்சு ஏழையாய் போய்ட்டோம்.மிச்சம் இருக்கிற இந்த மாடும் வண்டியும் தாங்க ஐயா எங்களுக்கு சோறு போடுது.ஆனாலும் எங்க ஐயா கொடுத்து வளர்ந்தவக நீங்க உங்ககிட்ட கூலி வாங்கினா கொடுத்த இடத்தில திருப்பி வாங்கின குத்தம் வருமுங்க நாங்க கொடுத்த இடத்தில் வாங்குறது இல்லைங்க என்று கூறிக்கொண்டே வண்டியை எடுத்தார் அந்த வண்டிகார பெருந்தகை.  

உழைப்பிற்கு வயது உண்டா ?

 உழைப்பிற்கு வயது உண்டா ?
கதை நீதி : உழைப்பே உயர்வு
அமெரிக்காவின் பிரபல கோடிஸ்வரர் ஒருவர் முதுமையிலும் கடும் உழப்பை மேற்கொண்டிருந்தார்.நாளுக்கு ஒரு நாடு என்று பயணம் செய்பவர் அவர்.ஒரு முறை விமானத்தில் அவர் பயணம் செய்த போது பக்கத்துக்கு இருக்கையில் இருந்த இளைஞர் அவரை வியப்புடன் பார்த்தார்.பயணத்தின் போது கூட பணி செய்து கொண்டே இருந்தார்.உடனே அந்த இளைஞர் அவரிடம் அய்யா நீங்கள் ஏகப்பட்ட சொத்து சேர்த்து வைத்துளிர்கள்.இனியும் இந்த வயதான காலத்தில் உழைக்க வேண்டுமா என்று கேட்டார்.அதற்கு அந்த பெரியவர் தம்பி, இந்த விமானத்தை விமானி நல்ல உயிரத்தில் பறக்க வைத்திருக்கிறார்.சிரமப்பட்டு மேலே ஏறியதால் இப்போது சுலபமாக பறக்றது இல்லையா.அதான் விமானம் மேலே எறிவிட்டது என்று விமானி என்ஜின் ஐ   அணைத்துவிட்டால்  என்ன ஆகும் விபத்து ஏற்பட்டு விடும்.அது போல தான்  வாழ்க்கையும் நாம் கடுமையாக   உழைத்து மேலே வந்து விட்டு,நாம் தான் மேலே வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்தி விட்டால் வாழ்கையிலும் விபத்து ஏற்பட்டு விடும் .உழைப்பு வருமனதுகனது மட்டும்மல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சியிற்கும் கூட என்று கூறியவர் வயதான இளைஞர் ராக்பெல்லர் ஆவார்.

கடவுளின் கருணையா ?

கடவுளின் கருணையா ?
கதை நீதி : முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்.
                        ஒரு உலக புகழ் பெற்ற இசை மேதை ஒருவர் வழக்கம்போல
அபாரமாக ஒருமுறை பியானோ வாசித்தபோது கூடி இருந்த அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரம் ஆகியது.பலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.அப்போது ஒரு பெண்மணி அவர் கரங்களை பற்றி கொண்டு முத்தமழை பொழிந்து,உங்கள் கரங்கள் விசேசமானவை.உங்களுக்கு என்று யாருக்கும் தராத சிறப்பான ஆற்றலை கடவுள் வழங்கி உள்ளார் என்று அப்பெண்மணி கூறினார்.அதற்கு அம்மேதை அம்மணி இது கடவுள் அளித்த ஆற்றல் இல்லை,தினம்தோறும் என்னுடிய 8 மணி நேர பயிற்சியின் பலன் இது. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நீங்களும் இப்படி வாசிக்கலாம் என்று கூறிய இசை மேதை வேறு யாரும் இல்லை செவிப்புலன் பழுதுற்ற பீத்தோவன்.

கடவுளை விட மனிதன் உயர்ந்தவனா ?

கடவுளை விட மனிதன் உயர்ந்தவனா ?
கதை நீதி:உள்ளத்தனைவது உயர்வு.
                              யார்  உயர்ந்தவர் கடவுளா? மனிதரா? என்று கேட்டால் எப்பொழுதும்  கடவுளே உயர்ந்தவர் என்ற பதில் மட்டுமே வரும் கடவுளை விட மனிதன் உயர்ந்த கதை இது.மகாபாரத போரிலே அர்ச்சுனனின் அம்புகளால் கர்ணனை கொல்ல  முடியவில்லை.அவனது தானங்களின் புண்ணிய பலன் அவனை காத்தது .எனவே அவனை அம்புகளால் கொல்ல முடியாது என்று எண்ணிய கண்ணன்,மரணத்தையும் யாசிப்பது என்று முடிவு செய்து,ஏழை  அந்தணன் வடிவில் வந்து, நீ செய்த புண்ணியங்கள் யாவையும் எனக்கு தா  என்று யாசகம் கேட்டான்.வந்திருப்பது கண்ணன் என்பதை உணர்ந்த கர்ணன் இறைவனே நம்மிடம் இறைவனே யாசகம் கேட்கிறபோது மறுப்பது எப்படி என்று மகிழ்வுடன் நீ செய்த  புன்னிய பலனை மட்டும் தான் கேட்டாய் நான் உமக்கு செய்த, செய்கிற,செய்ய போகிற யாவையும் உமக்கு அளிக்கிறேன்.என்று தாரை வார்த்தான் கர்ணன்.இதயத்தில் வழிந்த இரத்தத்தை உளங்கையில் வாரிய கர்ணன் தாரை  வார்தான் கர்ணன்.தானம்  வாங்கும் பொழுது கடவுள் கண்ணன்  கை தாழ்ந்தது  கொடுக்கும் பொழுது மனிதன் கர்ணன்  கை உயர்ந்தது கொடுகிற  எண்ணம் மனிதனை உயர்த்தியது 
வாங்குகிற எண்ணம் கடவுளை தாழ்த்தியது. அதற்காக கடவுள் தாழ்ந்தவர் இல்லை.மனிதனை உயர்த்துவதற்காக கடவுள் தன்னை தாழ்ததவும் தயங்க மாட்டார் என்பதே நிர்தசனமான உண்மை.

பொன்னியின் செல்வன் -கல்கி

     எனக்கு  படித்ததில்  பிடித்தது               
ச.வேல்முருகன்,
துணைப்பேராசிரியர்,
ஆதிபராசக்தி  பொறியியல் கல்லூரி ,
மேல்மருவத்தூர்.                                                                       
                             
                                            பொன்னியின் செல்வன் -கல்கி
எனக்கு  படித்ததில்  பிடித்தது  கல்கி அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" என்ற  வரலாற்று நாவல் தான் .பிற்கால  சோழர்களில் தலை சிறந்த மன்னராகிய இராஜா ராஜா சோழனின்  பெயரில் இருந்தாலும் வாணர்குல இளவரசன் வல்லவரையன் வந்தியத் தேவனே  கதையின் நாயகன் ஆவார் .தன்கையில் வந்த மணிமகுடத்தை இன்னொருவர் சிரசில் சுட்டிய தியாக சிகரம் அருள்மொழிலர்மனின் ( இராஜா ராஜா சோழன்) வீரத்தையும் தியாகத்தையும் மையமாக வைத்து வந்தியத் தேவன் எனும் கலகலப்பான பாத்திரத்தை கொண்டு மிக நேர்த்தியாக  கல்கி கிருஷ்ணமூர்த்தி 5 பாகங்களையும வாசகர்களின் நாடிதுடிப்பிற்கு ஏற்றவாறு 
நகர்த்தி செல்வதுதான் அனைவரையும் கவர்ந்த ஒன்று.கடைசி அத்தியாயத்தில் "வேடிக்கையும்,விளையாட்டும் ,குறும்பும் ,குதூகலமும்,துடுக்கும்  உருக்கொண்டவனாக இருந்த வந்தியத்தேவனை 
இனி நாம் காணப்போவதில்லை"என்று கல்கி அவர்கள் எழுதியதை  படித்தபோது  கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் ஆறாக ஓடியது இன்றும் மறக்க முடியாது.அப்போது நான் ஒன்பதாவது  வகுப்பு முடிந்து  பத்தாம் வகுப்பு செல்ல இருந்த நேரம் இருப்பினும் என்னை படிக்க தூண்டிய
என் பெற்றோர்களை நினைத்து  பெருமிதம் கொள்கிறேன்.