Monday 21 May 2018

தாரிணி - INS Tarini

சக்திப் பீடங்கள் நான்கில் ஒன்றாம்
தாரா தாரிணியின் பெயரிலுள்ள
இந்தியத் தயாரிப்பான
தாரிணி பாய்மரப் படகில்
உலகை வலம் வர...
மாண்டோவியில் இருந்து
சீறிப்பாய்ந்த
சுறாக்களே...
வருக... வருக...

இந்தியப் பெருங்கடலில் மிதந்து...
பூமத்திய ரேகையில்
வட அரைக்கோளத்தில் இருந்து
தென் அரைக்கோளம் தாவி
மகரரேகை தாண்டி...
கங்காரு தேசத்தின் பிரேமாண்டடில்

துறைமுகம் சென்று...
லீயுவின் நிலமுனை வழியே...
கிவிகளின் தேசத்தின் லிட்டேல்டன் துறைமுகம் சென்று...
சாண்டா அணிவகுப்பு மரியாதை பெற்று...
தென் பசிபிக் பெருங்கடலில்
ஹோர்ன் நிலமுனை வழியே
தென் அட்லாண்டிக் பெருங்கடலின்
போக்லாந்தின் ஸ்டான்லி துறைமுகம் சென்று....
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகம் அடைந்து...
குட்ஹோப் நிலமுனை வழியே...
இந்தியப் பெருங்கடலில் ஐக்கியமாகி...
சீறிப் பாய்ந்து..
மகர ரேகை கடந்து சீறுகையில்...
தொழில்நுட்பப் பழுது ஏற்பட...
மொரிசியசின் லூயிஸ் துறைமுகம் உதவ..
மீண்டும் பாயத் தொடங்கி...
பூமத்திய ரேகையில்
தென் அரைக்கோளத்தில் இருந்து
வட அரைக்கோளம் தாவி...
இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டல
எல்லையில் இருந்து..
இந்தியப் பிராந்திய கடல் எல்லையில்
நுழைந்து...
மாண்டோவிக்கு
உலகைச் சுற்றி வலம் வரும்...
கடற்படை வீராங்கனைகளே..
வருக... வருக...

கடல் மாசுவின் மீது ஆராய்ச்சி செய்து அறிக்கையோடு வரும்
வீரப்பெண்டீர்களே...
வருக.... வருக...

தரணி சுற்றத் தாரிணியில் சென்று வரும்
தாரகைகளே...
வருக... வருக...

கடல் சூழலியல் ஆராய்ந்து வரும்
அரிவைகளே...
வருக வருக...

கடல் கடத்தல் பாவம் என்ற தேசத்தில்...
கடலில் உலகைச் சுற்றிய..
நங்கைகளே...
வருக... வருக...

வேலையாள்ப் போல் பார்த்த பெண்களை
உலகைச் சுற்றி வந்து உலகையே வியக்க வைத்த..
மடந்தைகளே..
வருக... வருக...

வேடிக்கைப் பார்ப்பவளாய் வைத்திருப்போரை
வேடிக்கைப் பார்க்க வைத்த
தெரிவைகளே...
வருக... வருக...

பெண்டீர்க் காயங்களை ஆற்றி
ஆற்றுக் காட்ட வந்த
ஆறு பெண்கள் குழுவே...
வருக... வருக...

தேசம் திரும்பும்
மங்கைகளே...
பாசமுடன் வரவேற்கிறோம்...
வருக... வருக...

ஆயிரமாயிரம் மாற்றம் கண்ட
தேசத்தில்...
மாற்றம் காண விழையும்...
மனிதிகளே...
மகிழ்வுடன் வரவேற்கிறோம்...
வருக... வருக...

வர்த்திகா ஜோஷியே
வருக... வருக...

பிரதிபா ஜம்வாலே
வருக... வருக...

ஐஸ்வரியா போடப்பட்டியே
வருக... வருக...

பட்டாரப்பள்ளி சுவாதியே
வருக... வருக...

விஜய தேவியே
வருக... வருக...

பயல் குப்தாவே
வருக... வருக...

உம்மைக் கண்டும் மாறுவோர்
சிலரேனும் மாறட்டும்...
மங்கையர் வாழ்வு மலரட்டும்....

தேசம் கை கொடுக்கும்...
நேசமுடன் நாம் கொடுத்தால்...

                     -பரத் சந்திரன் சுப்ரமணியன்.



No comments:

Post a Comment