Tuesday 4 October 2016

கதறி துடிக்கிறாள் பாரத மாதா!

என் சொல்வேன் என் சொல்வேன்
எப்போதோ வரப்போகும் உன்னிடம் அதை வாங்கி வா இதை வாங்கி வா என்று
அன்பு கட்டளை இட அலைபேசியில் பேசிட விரைந்து வரும்
குழந்தை இடம் என் சொல்வேன்
உன் தந்தை இடம் இனி பேசவே முடியாதென்று
உன்னிடம் கொஞ்சி பேசி மகிழும் உன் மனைவி இடம் என் சொல்வேன்
உன்னை அரவணைக்கும் கைகள் உன்னை  இனி ஆர தழுவாதென்று
செல்ல சண்டை இடும் உன் சகோதர சகோதரிகளிடம் என் சொல்வேன்
இனி  உங்கள் சகோதரனிடம் செல்ல சண்டை இட முடியாது என்று
உன்னையே நினைத்து உருகும் உன் தாய் இடம் என் சொல்வேன்
உங்கள் மகனின் நினைவுகள் மட்டுமே மிஞ்சியது என்று
உன்னை நினைத்து என்றும் பெருமை கொள்ளும் உன் தந்தை இடத்து என் சொல்வேன்
உங்கள் அருமை பெருமை மகன் இன் உயிர் நீத்தான்  என்று
என் சொல்வேன்  என் சொல்வேன் என்று- அழும்
பாரத மாதவிடம் கவலை படாதே தாயே
என் மகனும் என்னுடைய  எண்ணற்ற இந்திய சகோதரர்களும்
உன்னை காப்பார்கள் என்று கூறுகிறது
பாரதத்தை காக்க எதிரிகளிடம் போராடி இன் உயிர் நீத்த ராணுவ வீரனின் ஆத்மா
கேட்ட உடன் மேலும் மனம் உடைந்து கதறி துடிக்கிறாள் பாரத மாதா
உன்னையும்  இழந்து விட்டேனே என்று........

உரி தீவிரவாத தாக்குதலுக்கு பழியான எனது அருமை சகோதரர்களுக்காக
அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும்
அவர்களின் எண்ணமும் லட்சியமும் நிறைவேறிடவும்
அவர்கள் குடும்பம் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்ந்திடவும்
எல்லாம் வல்ல உண்மை பரம் பொருளை வேண்டி நிற்கும்...........

                                                                           -பரத் சந்திரன் சுப்ரமணியன்
 

No comments:

Post a Comment