Monday 2 March 2015

யார் தான் காரணம் ?

தினம் தினம் இன்னல்களை அனுபவிப்பது எனது அன்பு சகோதர மீனவர்கள் என்ற எண்ணம் ஏன் டெல்லியில் உள்ள பெரிய மனிதர்களுக்கு வரவில்லை.
இலங்கை மீதான பயமா?, இங்குள்ள பெரிய மனிதர்கள் எடுத்துரைக்க வேண்டிய விதத்தில் எடுத்துரைக்காததன் விணையா? இல்லை, தமிழர்கள் தானே என்ற எண்ணமா ?  யார் தான் காரணம்? இலங்கை மீதான பயமா என்றால்  குழந்தைக் கூட  இல்லை என்று சொல்லி விடும் காரணம் மிக மிக சிறய படை பலம்  கொண்ட இலங்கையிடம் இந்தியா பயப்படுகிறதா? என்றால் இல்லை. சரி, இங்குள்ள அரசியல்வாதிகள் எடுத்துரைக்க வேண்டிய விதத்தில் எடுத்துரைக்காததன் விணை என்றால் நம் தமிழக அரசியல்வாதிகளின் அலட்சியம் ஒரு காரணமா? அப்படி என்றால் பிறகு  எதற்கு இத்தகைய பிரதிநிதிகள், நாம் எதற்கு இவர்களுக்கு ஓட்டு போட்டு மக்கள் மன்றங்களுக்கு அனுப்பினோம். முடிய வில்லை என்றால் ஏன் முடிய வில்லை பிறகு எதற்கு வாக்குறுதிகளை அள்ளி அள்ளி அளிக்கிறார்கள். நம் மக்கள் தானே முட்டாள்கள் காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம், பிறகு வாக்குறுதிகளை   அவர்களே மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா?  அல்லது தமிழர்கள் தானே என்கிற  டெல்லியில் உள்ள பெரிய மனிதர்களின் எண்ணமா?  அப்படி என்ற எண்ணம் படைத்த அரசியல்வாதிகளிடம் நாம் பெருமையாக ஒன்றினை   சொல்லுவோம் "எங்கள் முன்னோர்களைப் போல் நாங்கள்  முல்லைக்கு தேரும்  கொடுப்போம், எங்களை சீண்டினால் இமயத்திலும் தமிழரின் வீரத்தை நிலை நாட்டிடுவோம்"  என்று.  

No comments:

Post a Comment