
அவரது அசாத்தியமான துணிச்சல், வேகம், அரசையும் அரசியலையும் கட்சியையும் ஒருங்கே வழிநடத்தி செல்லும் திறன் கொண்ட அவருக்கு கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர்.மக்கள் பிரதிநிதியாக இருந்த அவர் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.மற்றவர்களுக்கும் முன்னுதாரனமாகவும் இருக்க வேண்டும்.அவர் அப்படி செயல்பட்டாலும் அவர் ஆதரவாளர்கள்அவர் பால் கொண்ட அன்பால் தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுப்பட்டு மக்களுக்கும் மக்களின் சொத்தான பொது சொத்துக்கும் சேதம் விளைவித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் அவர்களின் எதிர்ப்பை நீதி துறையை அவமதிக்கும் வண்ணம் காண்பிப்பது, என்பது இந்தியாவின் நீதி துறையையும் சட்டத்தையும் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கர்ஐயும் சட்டம் பயின்ற வழக்குரைஞர் ,நீதிபதிகள் ஆகியோரை அவமதிப்பது போன்றதாகும்.எனவே நம் முதல்வர் அவர்களின் வேண்டுகோளின் படி அனைவரும் தங்கள் வன்முறையை கைவிட்டு அறவழியில் செயல்படுங்கள்.
No comments:
Post a Comment